tamilnadu

img

இளம்பிள்ளை: நீதிமன்ற உத்தரவை மீறி விளைநிலங்கள் அழிப்பு அரசு அதிகாரிகளின் செயலால் விவசாயிகள் அதிர்ச்சி

இளம்பிள்ளை, அக். 8- இளம்பிள்ளை அருகே 80 வரு டங்களாக விவசாயம் செய்து வந்த நிலத்தில் மாணவர் விடுதி கட்ட எவ் வித முன்னறிவிப்பும் இன்றி அதி காரிகள் பயிர்களை அழித்ததால் விவ சாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், கொம்பாடிபட்டி  கொள்ளுக் கரடு பகுதியில் ரூ.96.54 கோடி மதிப் பில் சட்டக்கல்லூரி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும், கல்பாரப்பட்டி கிராமம், சேவாம்பாளையம் பகுதியில் சுமார் 12 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு விடு திகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. ஆனால், அவ்விடத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டியும், மீதமுள்ள நிலத்தில் விவசாயம் செய் தும் வாழ்ந்து வருகின்றனர். ஆகவே, இவ்விடத்தில் மாணவர் விடுதி கட்டு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், விவசாய நிலத்தை அரசு கையகப் படுத்துவதற்கு முன் முறையான அறி விப்பு கொடுக்கப்படும் என உத்தர விட்டு வழக்கை முடித்து வைத்தது.  

இந்நிலையில், புதனன்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நீதி மன்ற உத்தரவுக்கு மாறாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சேலம் தெற்கு வட்டாட்சியர் ரமேஷ்குமார் முன்னிலையில், விடுதி கட்ட அளவீடு செய்யப்பட்ட 2.5  ஏக்கர் விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரம்  உள் ளிட்டவைகளை இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந் தனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயி கள் கூறுகையில், நான்கு தலை முறையாக இப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். எங்க ளுக்கு எந்த ஒரு கால அவகாசம் கொடுக்காமலும், முன்னறிவிப்பின்றி விளை நிலத்தில் உள்ள தென்னை மரம், சோளம்  உள்ளிட்டவைகளை, நீதிமன்ற உத்தரவை  மதிக்காமல் வரு வாய்த்துறையினர் அழித்துவிட்ட னர். கொரோனா பொதுமுடக்க காலத் தில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் எங்களுக்கு அரசு அதிகாரிக ளின் செயல் வேதனை தரக்கூடியதாக உள்ளது என தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் அப்பகுதியினர் அச்ச மடைந்துள்ளனர்.