tamilnadu

இடங்கணசாலை : முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

இளம்பிள்ளை, செப். 13-   இடங்கணசாலை பேரூராட்சியில் முகக்கவ சம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேரூ ராட்சி  பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுகாதார பணிகள்  தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக வெள்ளியன்று இடங்கணசாலை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களிடம் விழிப் புணர்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அனைவரும் வெளியில் வரும்போது கட்டா யம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவு றுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இளம் பிள்ளை கே.வி.பி தியேட்டர் சாலையில்  முகக்க வசம் அணியாமல்  சென்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.