இளம்பிள்ளை, நவ. 7- சங்ககிரியில் விளைநிலங்களில் ஐடி பிஎல் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட விவ சாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் இருகூரிலிருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவன கொந்தி வரை ஐடிபிஎல் எண்ணெய் குழாய் களை விவசாய நிலங்கள் பாரத் பெட்ரோ லியம் நிறுவனத்தினர் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்கில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டம், சங்க கிரி அருகே உள்ள வளைய செட்டிபாளை யத் தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்ககிரி தாலுகா பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட் டத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகி ராமமூர்த்தி உட்பட 50க்கும் மேற் பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.