சேலம், டிச.14- சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மின்வேலி யில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத் தூர் வனப்பகுதியில் ஏராள மான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி தமிழக-கர்நாடக எல்லை யில் உள்ளதால் யானைகள் அதிகளவில் உள்ளன. ஆரம் பத்தில் தந்தங்களுக்காக வேட்டையாடும் கும்பல் யானைகளை கொன்று வந்தது.இந்நிலையில் யானை தண்ணீர் தேடியும், உணவுக்காகவும் ஊருக்குள் நுழைந்து அங்குள்ள பயிர்களை சேதப் படுத்தி வந்தன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தனர். மேலும் யானைகள் பயிர்களை சேதப் படுத்துவதை தடுக்க விவசாய நிலங்களை சுற்றிலும் மின்வேலி அமைத்தும், குழிகள் தோண்டியும் பயிர்களை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் சனியன்று காலை பெரிய தந்தத்துடன் வனப்பகுதியில் தண்டாகேட் அருகில் உள்ள கிமியான் காட்டுவலவு பகுதி யில் தங்கவேல் என்பவரது தோட்டத்தில் பெரிய தந்தத்துடன் கூடிய 40 வயது மதிக்கத் தக்க ஆண் யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது. இதனை பார்த்த அப் பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் மேட்டூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு வந்து உயிரிழந்த யானையை பார்வை யிட்டனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.