tamilnadu

img

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்காதே வங்கி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 11- பொதுத்துறை வங்கி களை தனியார் மயமாக்கும் நிதி ஆயோக் அறிவிப்பை கண்டித்து, இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் சேலம் ஐந்து ரோடு பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்திய பாஜக அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மய மாக்கி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மகாராஷ்டிரா வங்கி, பஞ்சாப் சிந்து வங்கி  ஆகிய மூன்று வங்கிகளை தனியார்மயப் படுத்தும் நிதி ஆயோக் அறிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், மாவட்டச் செயலாளர் தீனதயா ளன், கனரா, இந்தியன் வங்கி, ஓவர்சீஸ் வங்கி, கூட்டுறவு நகர வங்கி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;