tamilnadu

ஏற்காட்டில் பல் மருத்துவர்கள் பயிலரங்கம்

ஏற்காடு, நவ.3- பல் மருத்துவர்களுக்கான இருநாள் பயிலரங்கு ஏற் காட்டில் ஞாயிறன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில்  இந்திய மருத்துவ சங்கம்  சார்பில் கடந்த 2,3 ஆகிய இருநாட்களாக பயிலரங்கம் நடை பெற்றது. அகில இந்திய செயலாளர் அசேக் டேப்லே தலை மையில் பயிலரங்கு துவங்கியது. பொருளாளர் தீபக் முக்சலா, தமிழ்நாடு சங்க செயலாளர் செந்தாமரை கண்ணன், தலைவர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீனா, பெய்ஜிங்கை சேர்ந்த பல் மருத்துவர் இல்யூ  பங்கேற்று சிறப்பித்தார். இப்பயிலரங்கில் பல் மருத்துவம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங் களில் இருந்து 850 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மேலும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல் மருத்துவ கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை சங்க சேலம் மாவட்ட தலைவர் வினேலா, செயலாளர் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். 

;