tamilnadu

img

வெளி மாநிலத்திலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை  சுகாதாரத்துறையினர் அதிரடி ஆய்வு

 இளம்பிள்ளை, மார்ச் 23- சேலம் அருகே வெளிமாநிலத்தில் இருந்து ஊர் திரும்பிய வர்களிடம் கொரோனா பாதிப்பு உள்ளதா என சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனால், அப் பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், அக்கர பாளையம் ஊராட்சி பகுதியான பாலம்பட்டியில் ராஜஸ் தான் பகுதியைச் சேர்ந்தவர் சோனாராம் (38). இவரது மனைவி தர்யாதேவி (37), மகன் பிரகாஷ்குமார் (11), மகள்  லட்சுமிகுமாரி (9) உள்ளிட்டோர் குடும்பத்துடன் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு கடந்த வாரம் ரயில் மூலம் சென்று பாலம்பட்டி திரும்பியுள்ளனர். இந்நிலை யில், இவர்களுக்கு காய்ச்சல் வந்துள்ளதாக தகவல் பரவிய தையடுத்து அங்கு திங்களன்று சுகாதாரத்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொள்ள சென்றனர். அப்பகுதியில் ராஜஸ்தானைச் சேர்ந்த மேலும் பலர் தங்கி காகித பொம்மை  செய்து வருவதாக தெரியவந்தது. இவர்களையும் சுகாதார துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வரு கின்றனர்.  இதேபோல், சீரகாபாடியில் உள்ள  விநாயக மிஷின் தனி யார் மருத்துவ கல்லூரியில் வெளிநாடு மற்றும் வெளி மாநில மருத்துவர்களும், செவிலியர்களும் மற்றும் மாணவ, மாணவிகளும் அதிக அளவில் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்கியுள்ள பெரிய சீரகாபாடி, அரியானூர்,  சீரகாபாடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இளம்பிள்ளை, வேம்படிதாளம், பெருமாகவுண்டம்பட்டி, இடங்கணசாலை, கே.கே.நகர், கல்பாரப்பட்டி, மகுடஞ் சாவடி, தப்பக்குட்டை, காக்காபாளையம் உள்ளிட்ட பகுதி களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரத்திற் கும் மேற்பட்ட நபர்கள் இங்கு தங்கி ஜவுளித் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் ஹோலி  பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கடந்த வாரம் வந்துள்ள தால், இவர்களையும்  ஆய்வு மேற்கொள்ள சுகாதார துறை யினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி யில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வரு கின்றனர். மேலும் இளம்பிள்ளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஜவுளி உற்பத்தியாளர்கள் ரயில், பஸ், கார்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு வியாபார ரீதியாக சென்று வந்துள்ளனர். இவர்களையும் தமிழக அரசும், சுகாதார துறையினரும் விரைந்து ஆய்வு மேற்கொண்டு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.