சேலம், ஆக 1- சேலம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா பரிசோதனை மையத்தில் பணி யாற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் பரிசோதனை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பரிசோதனை மையம் இயங்கி வருகி றது. இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய் யப்பட்டு, முடிவுகளை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரிசோதனை மையத் தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரிசோதனை மையம் தற்காலிகமாக மூடப்பட்டு பரிசோதனை மைய வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரி சோதனை எடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.