இளம்பிள்ளை, அக். 9- சங்ககிரியில் காவல் ஆய்வாளா் உள்பட 10 காவலர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதையடுத்து புகார் அளித்து சென்ற பொதுமக்கள் அச்சமடைந்துள்ள னர். சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களை காட்டிலும், சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வரு பவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள் ளனர். இந்நிலையில், சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் முத்துசாமி, தலைமை காவலா் நடேசன் ஆகிய இருவருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் எடப் பாடி அரசு கலைக் கல்லூரி வளாகத்திலுள்ள சிகிச்சை முகாமில் அனுமதிக்கப்பட்டனா்.
இதையடுத்து சங்ககிரி காவல் நிலை யத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்க ளுக்கும் பரிசோதனை மேற்கொண்டதில், பெண் காவலர் உள்பட 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும், வெள்ளியன்று மூன்று காவலர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்ககிரி பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை சார்பில் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக் கப்பட்டு தீவிர கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளித்து சென்ற பொதுமக்கள் பெரும் அச்சத் திற்குள்ளாகியுள்ளனர்.