சேலம்:
சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு 11வது மாநில மாநாடு சேலத்தில் பேரணியுடன் துவங்கியது.
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் (சிஐடியு) 11வது தமிழ் மாநில மாநாடு சேலம் புதிய பேருந்து நிலையம் ஹோட்டல் பாலகிருஷ்ணா (தோழர் சரஸ்வதி நினைவரங்கத்தில்) சனியன்று துவங்கியது. முன்னதாக, சிஐடியு மாவட்ட குழு அலுவலகமான வி.பி.சிந்தன் நினைவரங்கில் பேரணி துவங்கி மாநாட்டு அரங்கை வந்தடைந்தது. அங்கு மாநாட்டின் கொடியை சேலம் மாவட்ட மூத்த தோழர் காவேரியம்மாள் ஏற்றிவைத்தார். இதைத்தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இம்மாநாட்டிற்கு மாநில செயலாளர் டி.டெய்சி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்புக் குழுவின் அகில இந்தியகன்வீனர் ஏ.ஆர்.சிந்து துவக்கிவைத்து பேசினார். மேலும்,சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் அகில இந்தியதுணைத் தலைவர் மாலதிசிட்டிபாபு, மாநில கன்வீனர்எம்.மகாலட்சுமி, வரவேற்புக்குழு தலைவர் டி.உதயகுமார்,சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.