tamilnadu

img

மேட்டூர் நகராட்சியை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

மேட்டூர், ஆக. 18- தூய்மை பணியாளர்களிடம் தொழிலாளர் விரோதப் போக்குடன்  செயல்படும் மேட்டூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு ஊரக உள்ளாட்சித்துறை  ஊழியர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளாக பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்தும் இதுவரை கணக்குச்சீட்டு வழங் கப்படவில்லை.  மேலும், பணிக்கருவிகள், பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்படவில்லை. பெண் தொழிலாளர்க ளிடம் அநாகரிமாக நடந்து கொள்ளும் மேற்பார்வையாளர் ஆனந்தன் என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகி சி.கருப்பண்ணன் உட்பட தூய்மைப்பணியாளர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

;