சேலம், மார்ச் 1- குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி நடை பெறும் போராட்டத்தில் ஞாயி றன்று பாலர் சங்கத்தினர் பங்கேற் றனர். மத்திய மோடி அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி கடந்த 14 நாட்களாக சேலம் மாநகரம் கோட்டையில் தொடர் போராட்டம் நடைபெற்று வரு கிறது.இப்போராட்டத்தை ஆதரித்து சேலம் வடக்கு மாநகர வாலிபர் சங்கம், பாலர் சங்கத்தினர் தேசபிதா காந்தி, பாரதி, பகத்சிங், அம்பேத்கர் போன்ற தேசத் தலை வர்கள் முகமூடி அணிந்து பங்கேற் றனர்.இது பார்ப்போர் மற்றும் போராடுவோர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், மே 17 இயக்க ஒருங்கி ணைப்பாளர் திருமுருகன் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், வாலிபர் சங்க வடக்கு மாநகரத் தலைவர் சதீஷ் குமார், செயலாளர் கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.