இளம்பிள்ளை, ஆக. 29- இளம்பிள்ளையில் ஏசி வசதியுடன் தனியார் வங்கிகள், ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருவதால் கொரோனா பரவுமோ என பொதுமக்கள் அச்சத்துள்ளாகி உள்ளனர். கொரோனா நோய்த்தொற்ற பரவுவதைத் தடுக்கும் வகையில் வங்கிகள், ஏடிஎம் மையங்கள், ஜவுளி மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஏசி பயன்படுத்தக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இந்த உத்தரவிற்கு மாறாக சேலத்தை அடுத்த இளம்பிள்ளை மற்றும் இடங்கணசாலைப் பகுதிகளில் உள்ள தனியார் வங்கிகள், நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் ஏசி வசதியுடன் செயல்பட்டு வருகின்றன. இத னால் அப்பகுதியில் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். ஆகவே, சுகாதாரத் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.