ஏற்காடு, மார்ச் 19- ஏற்காட்டில், கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்க பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஏற் படுவதை தவிர்க்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் ஏற்காட்டில் டவுன் பஞ்சாயத்து சார் பில் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடங்க ளான வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத் துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. மேலும், நாகலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரஞ்சித் தலைமையில், பணி யாளர்கள் அப்பகுதி வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்தனர்.