tamilnadu

img

இளைஞர் மீது சுடு பாலை ஊற்றியவர் மீது நடவடிக்கை எடுத்திடுக மாவட்ட காவல் காண்கணிப்பாளரிடம் புகார்

சேலம், ஏப். 26-சேலத்தில் டீ கடையில் இளைஞர் மீது சுடு பாலை ஊற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் காண்கணிப்பளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா சிந்தாமணியூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கார்த்திக் கடந்த 23 ஆம் தேதி சிந்தாமணியூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு பேக்கரி டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜோதிஎன்பவரின் மகன் சபரீஸ்வரன் என்பவர்கார்த்திக்கிடம் தீடீரென வாக்குவாதம்செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கார்த்திக்கின் தலையில் சபரீஸ்வரன் பலமாக தாக்கியுள்ளார். மேலும் சுடு பாலை அவர் மீது ஊற்றியுள்ளார்.இதில், உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் படுகாயமடைந்த கார்த்திக், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது சபரீஸ்வரன் மீது சாதாரண பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொலை செய்யும் நோக்கோடு கார்த்திக்கின் மீது பாலை ஊற்றிய சபரீஸ்வரன் மீதுகொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

;