tamilnadu

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

‘அம்மாயி கும்பிட்ட சாமி’ கவிதை நூல் வெளியீடு

கவிஞர் பாரி கபிலனின் “அம்மாயி கும்பிட்ட சாமி” கவிதை நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமையன்று (ஏப்.25) சென்னை வடபழனி பேருந்து நிலையம் அருகில் எஸ்.வி.எஸ். மணி நினைவகத்தில் நடைபெற்றது. மூத்த வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் நூலை வெளியிட, வழக்குரைஞர் அருள்மொழி பெற்றுக்கொண்டார்.  கவிஞர் சி.எம்.குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்  ஓவியர் கு.புகழேந்தி வாழ்த்துரை வழங்கினார்.கவிஞர் ச.விசயலட்சுமி, எஸ்.வி.வி.வேணுகோபால் ஆகியோர் நூல் குறித்து பேசினர். கவிஞர் பாரி கபிலன் ஏற்புரை வழங்கினார். பிரீத்தி கல்பனா மணிமுடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.

2 லட்சத்து  47 ஆயிரம் பேருக்கு  கட்டணமில்லா சிகிச்சை 

சென்னை,ஏப்.26- தமிழ்நாடு அரசு ஓய்வூ தியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 47 ஆயி ரம் பயனாளிகள் 1 கோடியே 119 லட்சம் ரூபாய்க்கு கட்ட ணமில்லா மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்கள். மேலும் மார்ச் 2025 வரை ரூ.8.30 கோடி  தமிழ்நாடு மருத்துவ கவனிப்பு விதி யின்  கீழ் பரிந்துரைக்கப்பட்டு பயனாளிகளுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ளது  என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.