tamilnadu

img

‘மிக்ஜம்’ புயல் நிவாரணப் பணிகளுக்கு நிதி தாரீர்!

சென்னை, டிச. 8  ‘மிக்ஜம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவார ணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார் வலர்கள், பொதுமக்கள் முதலமைச்ச ரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத  பெருமழையால் சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திரு வள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்ச ரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், நல்லுள்ளம் கொண்ட பல்வேறு தொழில் நிறு வனங்களும், தன்னார்வ அமைப்பு களும், பொதுமக்களும் இந்த மாபெரும் பணிக்கு தங்களது பங்களிப் பினையும் வழங்கிட விருப்பம் தெரி வித்து, அரசைத் தொடர்பு கொண்டு வருகின்றனர். 

எனவே, பாதிக்கப்பட்ட பகுதி களை மறுசீரமைத்திடவும், புதிய  வாழ்வாதாரங்களை மீள உரு வாக்கிடவும் தொழில் நிறுவனங் களைச் சார்ந்தவர்களும், தன்னார்வ லர்களும், பொதுமக்களும் முத லமைச்சரின் பொது நிவாரண நிதி  வாயிலாக, மிக்ஜம் மீட்புப் பணி களுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிடுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(G)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-ன்கீழ் விலக்களிக்கப்படும்.

இந்த நன்கொடைகளை மின்னணு முறை மூலம் பின்வருமாறு வழங்கலாம்:

1. வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக https://cmprf.tn.gov.in என்ற இணையதளம் வழியாகச் செலுத்தி பற்றுச் சீட்டினைப் (Receipt) பெற்றுக்கொள்ளலாம். 

2. Electronic Clearing System (ECS) / RTGS / NEFT மூலமாக கீழ்க்கா ணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.

வங்கி பெயர்  -    
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கிளை - தலைமைச் செயலகம், சென்னை-600 009
சேமிப்புக் கணக்கு எண் -  117201000000070
IFS Code - IOBA0001172
MICR Code - 600020061
CMPRF PAN -   AAAGC0038F

3. UPI - VPA ID: tncmprf@iob மற்றும்  PhonePe, Google Pay, PayTM, Amazon Pay, Mobikwik  போன்ற பல்வேறு செயலிகள்.

மேற்கண்ட ECS மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாக பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, தொகை செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், முழுமை யான முகவரி, இ-மெயில் விவரம், தொலைபேசி /அலை பேசி எண் - ஆகிய தகவல்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. 

4. நிவாரண நிதி வழங்கும் வெளிநாடுவாழ் மக்கள், “IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai.” என்ற SWIFT Code-ஐப் பின்பற்றிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

5. மின்னணு மூலம் பரிவர்த் தனை செய்ய இயலாதவர்கள் குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, “முதலமைச்சரின் பொது நிவாரண நிதி (Chief Minister’s Public Relief Fund)” என்ற பெயரில், “அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், முதல்வர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் முகவரி jscmprf@tn.gov.in” என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

6. மேற்கூறிய முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் தவிர, நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility)-ன்கீழ்  பேரிடர் நிவாரணத்திற்காக நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

வங்கி பெயர்  -  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கிளை - தலைமைச் செயலகம், சென்னை - 600 009
சேமிப்புக் கணக்கு எண்  -    117201000017908
IFSC Code  -  OBA0001172 

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.