சென்னை, டிச.8 - மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக மக்களவை, மாநிலங்களை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மிக்ஜம் புயல் கடந்த டிசம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங் களில் கொட்டித் தீர்த்த மழை என்பது, 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவில் பெருமழை. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த பேரிடர் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஏற்பட் டுள்ள பேரிடர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கே ஏற்பட்டுள்ள பேரிடர். மழைநீர் வடிகால் பணி களை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தி இருந்ததால்தான் பேரழிவு தவிர்க்கப்பட்டது.
அதேபோல் அனைத்து துறை களும் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தது, முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வைத்திருந்தது இணைந்து மக்களைக் காத்துள்ளது.
இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று மீட்பு பணிகளின் காரணமாக மூன்று நாட்களுக்குள் பெரும்பாலான இடங்கள் மீட்கப்பட்டு இயல்பு வாழ்க் கைக்கு திரும்ப உள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மீட்பு பணி நடந்து வருகிறது. இத்தகைய அசாதாரண நேரத்தில் அனைத்து தரப்பும் மக்க ளுக்கு உறுதுணையாக நிற்க வேண் டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் பேரிடர் பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்கு உதவியாக நல்லுள்ளங்கள் பலர் முதலமைச்ச ரின் பொது நிவாரண நிதிக்கு தங்க ளுடைய பங்களிப்பை வழங்குகின்ற னர். அவர்களுக்கு எனது நெஞ் சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த இயற்கைப் பேரி டரில் இருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டி யது அவசியமாகிறது.எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம்.
இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று அனை வருக்கும் வேண்டுகோள் விடுக்கின் றேன். எனது ஒரு நாள் சம்பளம்...
அதன் தொடக்கமாக என்னுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள்- மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.