சென்னை,பிப்.12- ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் திங்களன்று ஆளுநர் ரவி தனது உரையை படிக்காமல் புறக்கணித் தார். இதையடுத்து அந்த உரையை முழுவ தும் பேரவைத் தலைவர் மு. அப்பாவு தமிழில் வாசித்தார்.
அந்த உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 விழுக்காடு, மக்கள் தொகையில் 6 விழுக்காடு மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம் இந்தியாவின் பொருளாதாரத் தில் 9 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்கு அளிக்கிறது.
2022-2023 ஆம் ஆண்டில் 7.2 விழுக்காடு நிலையான வளர்ச்சி வீதத்தை விஞ்சி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் சராசரி பண வீக்கத்தை பொறுத்தவரை 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் 6.65 விழுக்காடு பண வீக்கத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.97 விழுக்காடாக உள்ளது.
முதலிடத்தில் தமிழ்நாடு
இந்திய நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு அதே கால கட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் நமது மாநிலம் திறம்பட செயல்பட்டு வருவது இது மெய்ப்பிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமை மற்றும் அயராத முயற்சியின் விளைவாக குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது.
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால் 2021-2022-ல் 4 ஆம் இடத்தில் இருந்த நமது மாநிலம் 2022-2023 ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு வேகமாக முன்னேறி வருகிறது. பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சி யில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.
ரூ.20ஆயிரம் கோடி பற்றாக்குறை
சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்திக் காட்டியது பெருமை அளிக்கி றது. இயற்கை பேரிடர்களை எதிர் கொண்டு தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கிடப்பில் மெட்ரோ ரயில் திட்டம்
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கு உறுதியளித்தபடி ஒன்றிய பாஜக அரசு நிதி அளிக்கவில்லை. ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.மக்களின் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
வருகை பதிவு அதிகரிப்பு
பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியா கும். காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.
நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத் தப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி திட்டம் 16.85 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதல மைச்சரின் கனவுத் திட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. மகளிருக்கு மாதம் ரூ.1000 என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றி யுள்ளார்.
முன்னோடி திட்டம்
பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது நாட்டிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. 5.59 லட்சம் ஏக்கராக குறுவை சாகுபடியை உயர்த்தி தமிழ்நாடு வேளாண் துறை சாதனை படைத்துள்ளது. வரலாற்றி லேயே முதல் முறையாக பால் கொள்முதல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1 கோடிக்கும் அதிக மான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 அளிக்கப்பட்டு வருகிறது. 2.17 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர்.
மேகதாது அணையை தடுப்போம்!
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும். மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும். குறுவை சாகுபடியில் சாதனை ரூ. 76 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்த்தி தமிழ்நாடு வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.
3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.18,228 கோடியில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேலாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கு ரூ.4671 கோடி கடன் வழங்கப்பட்டுள் ளது. மருத்துவ சுற்றுலாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பரவலாக வளர்ச்சியை கொண்டு வர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல் படுத்தப்படுகிறது. 1000 ஆண்டுகள் பழமை யான கோயில்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.294 கோடியில் திட்டம் உள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது நாட்டின் உன்னதமான கொள்கைகள் தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி யிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தைப் பேணி பாதுகாப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. சிறுபான்மை யினர் மற்றும் இலங்கைத் தமிழர்களின் உரிமை களைப் பாதுகாத்து அவர்களுடன் என்றும் நாம் துணை நிற்போம். அந்த வகையில், ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்த அனுமதிப் பதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
தமிழ்நாடு என்பது மொழி மட்டுமல்ல, நம்மை ஒன்றிணைத்து நமது வாழ்வை செம்மைப் படுத்தும் உயிர்நாடி. நமது பழமையின் பெருமை. தற்காலத்தின் சிறப்பு மற்றும் எதிர்கால வளத்தின் ஊற்றாகும். உலகத் தமிழர்களுக்கும் தாய்த் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தொப்புள்கொடி உறவைப் பேணிப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளை யும் இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த அரசு பதவியேற்றது முதல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி, அவர்களின் எதிர்ப்பார்களையும் தாண்டி தேவைகளையும் நிறைவு செய்துள்ளோம். சமூக நீதி, மத நல்லிணக்கம், பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் மக்களாட்சியின் மாண்புகள் போன்றவற்றிற்கு நாட்டிக்கே வழிகாட்டியாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும் வகையில் இந்த நம்பிக்கை வரும்காலங் களிலும் நிலைக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அந்த உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.