tamilnadu

img

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்து வாலிபர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்து வாலிபர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காத 


புதுச்சேரி, மே 30-  புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்காத என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்து வாலிபர்கள் புதுச்சேரியில் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலை யில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநில முதலமைச்சர் ரங்க சாமி வாலிபர்கள் அரசிடம் வேலை வய்ப்பு களை எதிர்பார்க்காமல் மாடு வளர்க்கும் தொழில் செய்ய முன்வர வேண்டும் என்று பேசி இருந்தார். முதலமைச்சரின் பேச்சு வாலிபர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இதற்கு கண்டனமும் தெரிவித்தது. புதுச்சேரி வேலைவாய்ப்பு அலு வலகத்தில் பதிந்து எண்ணற்ற இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கும் நிலையில் முதல்வர் ரங்கசாமியின் பேச்சை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், விடுதலை சிறுத்தைகள் இளம் பாசறை உள்ளிட்ட இந்திய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சட்டப்பேரவை எதிரே வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கௌசிகன், முருகன், புரட்சி வளவன் ஆகியோர் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் ஆனந்த் பங்கேற்று கண்டன உரையாற்றினார். வாலிபர் மாணவர் சங்க நிர்வாகிகள் சஞ்சய் சேகரன், எழிலன், தமிழ்வாணன், முரளி, ஜெயபிரகாஷ், பிரவீன், இளங்கோ, சிவச்சந்திரன் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக காமராஜர் சிலையில் இருந்து வாலிபர், மாணவர்கள் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எருமை மாடு போல் வேடம் அணிந்து வாலி பர் பங்கேற்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.