tamilnadu

கடும் வெயிலுக்கு வாலிபர் பலி

சென்னை, மே. 5- சென்னை மீஞ்சூரில் வெயிலுக்கு 25 வயது வாலி பர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

மாநிலத்தில் வெயில் காரணமாக இதுவரை இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீஞ்சூர் பகுதியில் கடும் வெயிலில் கட்டிட வேலை யில் ஈடுபட்டிருந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தொழி லாளி சச்சின் என்பவர் வெப்ப வாதம் என அழைக்கப்படும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனே சக தொழிலா ளர்களால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு  சிகிச்சை பல னின்றி அவர் உயிரிழந்தார்.