tamilnadu

img

அமோனியா வாயு கசிவு: போராடும் மக்களுக்கு வாலிபர் சங்கம் ஆதரவு

சென்னை, ஜன. 7- சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து அமோனியா வாயு வெளி யேறியதில் பாதிக்கப்பட்ட மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன் ஆகியோர்  பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வை யிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து,

பிரச்சனை களை கேட்டறிந்தனர். இதுகுறித்து சிங்காரவேலன் கூறுகையில், புயல் வெள்ள பாதிப்பிலிருந்து மக்கள் மீள் வதற்குள் எண்ணை கசிவு ஏற்பட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களிலேயே மீண்டும்  அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தால் அந்த பகுதி மக்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக தலை யிட்டு நிறுவனத்தின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.

நிறு வனத்திடமிருந்து உரிய நிவார ணம் பெற்றுத்தர வேண்டும் என்றார். இதில் மாவட்டத் தலைவர் ஜி.நித்தியராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.அபிராமி, திரு வொற்றியூர் பகுதி தலைவர் சேகுவேரா, செயலாளர் ஆர்.ஸ்டாலின், மாவட்டக் குழு உறுப்பி னர் புவி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.