tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெறச் செய்வீர்! திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வேண்டுகோள்

சென்னை, ஏப்.17-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து அதன் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-நடக்கவிருக்கும் 17வது மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. ஜனநாயகத்திற்கும், மதச்சார் பின்மைக்கும், சமுகநீதிக்கும், மாநில அதிகாரத்திற்கும் எதிரான மதவெறி பாஜக - அதன் கூட்டணியும் வெற்றி பெற்றால் நாடு பாசிச மயமாகிவிடும். மக்களை சாதியால், மதத்தால் பிரிப்போரை ஆள விடலாமா?உண்ணும் உரிமைக்கும், எண் ணும் உரிமைக்கும் தடைசெய்யும் ஆட்சி மீண்டும் வரலாமா? 3 நிமிடத் திற்கு ஒரு முறை பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் - கொடூர ஆட்சி கோட்டைக்கு வரலாமா? ‘‘கார்ப்பரேட் - சாமியார்களுக்கான’’ ஆட்சியை மீண்டும் கொண்டு வரலாமா?25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்குக் காரணமான பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு மீண்டும் வரலாமா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, கருப்புப் பண மீட்பு என்று கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாத கட்சிக்குப் பாடம் கற்பிக்கவேண்டாமா? குலக்கல்வித் திட்டத்தை குருகுலம் என்ற பெயரால் கொண்டு வரும் காவி மய ஆட்சி வந்தால் நாடு என்னாகும்?இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் ஆரியமய ஆட்சியை அனுமதிக்கலாமா? செம்மொழி தகுதியை சீரழிக்க, செம்மொழி நிறுவனத்தை ‘தினக்கூலி’ நிறுவனமாக்கும் தமிழ் அழிப் பாளர்களுக்கு வாக்களிக்கலாமா?காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொருளாதார வளர்ச்சி 10.7 விழுக் காடு, பாஜக ஆட்சியில் இப்பொழுது பொருளாதார வீழ்ச்சி (7.1 விழுக்காடு).


இந்த பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு எந்த நிலைக்கு ஆளாகும்? தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகள் அனைத்தையும் தன்னதிகாரம் கொண்டு உருக்குலைத்த மோடியின் ஆட்சி தேவையா? மாநில உரிமைகளைப் பறிக்கும் மோடி ஆட்சி மீண்டும் வந்தால் என்ன கதியாகும்?திமுக - காங்கிரஸ் - இடதுசாரிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும், பாஜக- அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக் கைகளையும் ஒப்பிட்டு - எது மக்களுக்கான ஆட்சி என்று முடிவு கட்டவேண்டாமா? இயற்கைக் கொடூரத்தால் கடும் பாதிப்புக்கு ஆளான தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தைகூட சொல்ல மனமில்லா மோடிக்குப் பாடம் கற்பிக்க வேண் டாமா? உங்கள் வாக்கு உயிரினும் மேலானது, பணத்திற்காக அதனை விற்காதீர்! தமிழ்நாட்டில் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணிக்கே வாக் களித்து வெற்றி பெறச் செய்வீர்!நீங்கள் வாக்களிக்கும் சின்னத்தில் பொத்தானை அழுத்துங்கள், அந்தச் சின்னத்தில் விளக்கு எரிகிறதா என்று கவனியுங்கள். அவ்வாறு வராமல் வேறு சின்னத்திற்கு எதிராக விளக்கு வெளிச்சம் தெரிந்தால் உங்கள் விரலை அப்படியே எடுக்காமல் தேர்தல் அதிகாரிகளை அழைத்துப் புகார் செய்யுங்கள், எழுத்து மூலமாக.உஷார்! உஷார்!! களத்து மேட்டுக்கு வந்த நெல் வீடு வந்து சேரும் வரை கவனம்! கவனம்!! கவனம்!!!

;