சென்னை, மார்ச் 29 - தேர்தலில் நிற்க பணம் தேவை யில்லை, மக்களின் செல்வாக்குதான் தேவை என்று திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கூறினார். இந்தியா கூட்டணி சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டி யனுக்கு வாக்கு கேட்டு வியாழனன்று (மார்ச் 28) நீலாங்கரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மா.சுப்பிர மணியன், தமிழகத்தில் பாஜக வெற்றி பெறவே முடியாது. ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை. 3 வடகிழக்கு மாநிலங்களில் போட்டியிடவில்லை. பாஜக ஆளும் கட்சியாக உள்ள மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களே, போட்டியிட மறுத்து விட்டனர். பல மாநிலங்களில் கூட்டணி உடைந்து விட்டது. இந்த நிலையில் எப்படி வெற்றி பெறுவார்கள்? என்று கேட்டார். தேர்தலில் நிற்க பணமில்லை. தமிழ்நாடு, ஆந்திராவில் வெற்றி பெற சாதகமான சூழல் நிலவவில்லை.
எனவே, போட்டியிடவில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறியிருக்கிறார். தேர்தலில் நிற்க பணம் தேவையில்லை; மக்களின் பலம்தான் தேவை. பாஜக தோற்கும் என்பதை நிர்மலா சீதாராமன் ஒப்புக் கொண்டு விட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் பத்திரம் மிகப்பெரிய மோசடி. அது தேர்லில் எதிரொலிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவரும், பொருளாதார அறிஞருமான பரகால பிரபாகர் மோடி கூறுகிறார். மோடி தோற்பார் என்று பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியும் கூறுகிறார்.
எனவே பாஜக வெற்றி பெறவே முடியாது. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் 5 லட்சத் திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார். தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்க பாண்டியன் குறிப்பிடுகையில், “நிதி கேட்ட போதெல்லாம் வெறும் கை காட்டிய பிரதமருக்கு வேலையில்லா மல் செய்யப் போகிறது தமிழ்நாடு. 40 தொகுதிகளிலும் இந்தியா அணி வெல்லும். தென்சென்னை வாக்கு வித்தியாசத்தில் சாதனை படைக்கும்” என்றார்.
சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதிச் செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, துணை மேயர் மு.மகேஷ் குமார், திமுக அவைத்தலை வர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன் மற்றும் அடையாறு துரை (காங்கிரஸ்), கழக குமார் (மதிமுக), எஸ்.கே.சிவா (சிபிஐ), இளையா (விசிக) உள்ளிட்டோர் பேசினர்.