tamilnadu

img

சென்னை - பெங்களூருக்கு 4 மணி நேரத்தில் பயணிக்கலாம்!

சென்னை,ஆக.18- சென்னை முதல் பெங்களூரு மற்றும் இன்னும் சில இடங்களுக்கு ரயிலில் செல்லும் பயண நேரம் சுமார்  20 நிமிடங்கள் குறையப் போகிறது. அதாவது, அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையேயான 144 கிலோ மீட்டர் ரயில் பாதையில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் தற்போது மணிக்கு 110 கிலோ மீட்டரிலிருந்து மணிக்கு 130 கிலோ மீட்டர் ஆக அதிகரிக்கப்படுகிறது. இந்த ரயில் பாதையில் தண்ட வாளங்கள் சீரமைக்கப்பட்டு, சிக்னல் கள் மேம்படுத்தப்பட்டு இருக்கும் காரணத்தால், தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே சென்னை - அரக்கோ ணம் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு, வேகம் அதிகரிக்கப்படும் நிலையில், அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை இடையேயான வழித்தடமும் அதிகரிக்கப்படுகிறது. இந்த வேக அதிகரிப்பு, சென்னை யில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில்களின் ஒட்டுமொத்த பயண நேரம் 4.25 நிமிடங்களாகும், வந்தே பாரத் ரயிலுக்கு 4 மணி நேரமாகும் குறையக்கூடும். ஏற்கனவே 5.30 மணி நேரம் அல்லது 6 மணி நேரம் என்று சதாப்தி மற்றும் பிருந்தாவன் விரைவு ரயில்கள் இயங்கி வந்த நிலையில், இனி பயண நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி 124 ரயில்களின்  செயல்பட்டு பிரிவு மற்றும் லோகோ  பைலட்டுக்கு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளனர். அதில், அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை வரை எல்.எச்.பி. பெட்டிகள் கொண்ட ரயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பயணிக் கலாம். அதுவே ஐசிஎப் டிசைன் பெட்டிகள் கொண்ட ரயில்கள் மணிக்கு  110 கி.மீ. வேகம் வரை இயக்கலாம். இது அடுத்த வாரத்தில் இருந்து பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், பெங்களூரு, கோவை,  திருவனந்தபுரம், கொச்சி, கோழிக் கோடு, மங்களூரு, மும்பை உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லும் பயண  நேரம் குறையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதன் மூலம், சென்னை முதல் பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்து களின் பயண நேரத்தில் இந்திய ரயில்வே போட்டிபோடும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.