சென்னை, மே 9- தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மே 10 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்கள் இயங்கி வருகின்றன. இவற் றில் தற்போது 2024-2025 ஆம் கல்வி யாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாண வர்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் மே 10 முதல் விண்ணப்பிக்க லாம். கடைசி தேதி ஜூன் 7 ஆகும்.
இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம்.
இந்த மையங்களின் பட்டியல் மற் றும் தொலைபேசி விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.