tamilnadu

img

கல்லீரல் பாதிப்பால் சாந்தன் மரணம்!

சென்னை, பிப்.28- ராஜீவ் காந்தி கொலை  வழக்கில் 32 ஆண்டு சிறைத்  தண்டனை அனுபவித்து விடு தலையான- இலங்கையைச் சேர்ந்த சுதேந்திரராஜா என்ற சாந்தன், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந் தார். அவருக்கு வயது 55. விடுதலைக்குப் பின்,  திருச்சி மத்தியச் சிறை வளா கத்திலுள்ள சிறப்பு முகாமில்  தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன், கல்லீரல் பாதிப்பு மற்றும் கால் வீக்கப் பிரச்ச னைகள் காரணமாக, 2024  ஜனவரி 27 அன்று சென்னை  ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.  

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந் தது. இந்நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி பிப்ரவரி  28 அன்று காலை 7.50 மணி யளவில் உயிரிழந்துள்ளார். “சாந்தனுக்கு கல்லீரல்  செயலிழப்பு ஏற்பட்டிருந் தது. இதனால் அவருக்கு கல்  லீரல் சிகிச்சை பிரிவில் மருத்  துவர் பிரேம்குமார் தலைமை யில் அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வந் தது. கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டிருந்ததால் அந்தப் பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்பதை அறிய முயற்சித்து வந்தோம்.

ஆனால், அந்த  பரிசோதனைக்கு சாந்தன் மறுத்து விட்டார். கல்லீரல்  கடுமையாக பாதிக்கப்பட்டி ருந்ததால் சுயநினைவு இழப்  பதும் இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக இருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் பிப்ரவரி 27  இரவு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. புதனன்று அதி காலை 4.15 மணியளில் சாந்த னுக்கு இதய அடைப்பு ஏற்பட்  டது.

அதற்காக சி.பி.ஆர்  (CPR) செய்யப்பட்ட நிலை யில், காலை 7.50 மணியள வில் சாந்தன் உயிரிழந்துள் ளார்” என்று ராஜீவ் காந்தி  மருத்துவமனை முதல்வர்  தேரணிராஜன் தெரிவித்துள் ளார். சாந்தன் உடல், இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சொந்த ஊருக்கு எடுத்துச்  செல்லப்பட உள்ளதாக, அவ ரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சாந்தன் இலங்கை செல்வதற்காக ஒன்றிய அரசு கடந்த வாரம் தான்  அனுமதி அளித்திருந்தது. ஆனால், இலங்கை சென்று  தனது தாயாரைச் சந்திப்ப தற்கு முன்னதாகவே சாந் தன் உயிரிழந்துள்ளார். சாந்தனின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடு தலைச் சிறுத்தைகள் கட்சித்  தலைவர் தொல்.திருமாவள வன் எம்.பி., நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். சாந்தனின்  உடல் இலங்கை யாழ்ப்  பாணத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக் கை களில் ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் ஈடுபட் டுள்ளனர்.