tamilnadu

கும்மிடிப்பூண்டியில் தொழிலாளி தற்கொலை

திருவள்ளூர், ஜூன் 29- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்கா வளா கத்திலுள்ள தனியார் இரும்பு தகடுகள் சமபடுத்தும்  தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது இங்கு பாதிர்வேடு கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (40) மேற்பார்வை யாளராக  பணி புரிந்து வந்தார். வழக்கம் போல் சனிக்கிழமை  (ஜூன் 29) அன்று  பணிக்கு வந்த பாலசுப்பிரமணியம் திடீரென இரும்பு தகடு களை அறுக்கும் இயந்தி ரத்தில் தலையை வைத்து  தற்கொலைக்கு முயன் றுள்ளார்.  இதில் கழுத்து அறுபட்டு  உயிருக்கு ஆபத்தான நிலை யில் அவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில்  அவர் பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  சென்ற சிப்காட்  காவல்துறை யினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொழிற் சாலையில் ஏற்பட்ட பணிச் சுமையா காரணமாக பால சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை செய்து வரு கிறார்கள்.

;