tamilnadu

img

புதுவை ஆளுநர் மாளிகை முன்பு பெண்கள் போராட்டம்

குடும்ப அட்டைக்கு அரிசியே வழங்கக்கோரி

புதுச்சேரி,நவ.20- பணத்திற்கு பதில் அரிசியே வழங்கக்கோரி  புதுச்சேரி துணை நிலை ஆளு நர் மாளிகை  அருகே பெண்கள் ஆவேச போராட்டம் நடத்தினர். புதுச்சேரி நியாயவிலைக் கடையில் வழங்கப்பட்டு வந்த இலவச அரிக்கு பதில்,  அவரவர் வங்கிக் கணக்கில் அரசு சார்பில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த  முடிவால் ஏழை, எளிய, நடுத்தர மற்றும் கிராமப்புற பெண்கள் கடுமையாக பாதிக் கப்பட்டு வருகின்றனர்.  எனவே, மீண்டும் அரிசியே  வழங்கக் கோரி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி  மாதாகோவில் வீதியில் துவங்கிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பிர தேசத் தலைவர் வி.சந்திரா தலைமை தாங்கி னார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதாசுந்தரராமன் ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசினார். ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க புதுச்சேரி பிர தேசச் செயலாளர் சத்தியா, துணைத் தலைவர்  இளவரசி, சமம் சுயசார்பு இயக்கத்தின் செய லாளர் மாரிமுத்து, உதவும் கரங்கள் அமைப்  பின் நிர்வாகி ஆலீஸ்தாமஸ், மற்றும் பல்வேறு இயக்கத்தின் நிர்வாகிகள் கணேசன்,  அஸம்த பார்த்த சாரதி, விக்டர், சுந்தர வதனி,பரிமளா உட்பட திரளான பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

மனு

முன்னதாக புதுச்சேரி பெண்களிடம் பெறப்பட்ட கையெழுத்து பிரதிகளை இந்த போராட்டத்தின் முடிவில் சுதாசுந்தரராமன் தலைமையில் ஆளுநர் கிரண்பேடியை  சந்தித்து வழங்கினார்கள். அதில் அரிசியே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்த னர். மனுவை பெற்றுக் கொண்ட ஆளுநர் இது குறித்து பரிசீலனை செய்வதாக மாதர் சங்க தலைவர்களிடம் கூறியுள்ளார்.