மக்களவைத் தேர்தல் மற்றும் அரசு விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் திங்கட்கிழமை பெரும்பாலானோர் சென்னை திரும்பினர். இதனால் வானகரம் போரூர் சுங்கச்சாவடியில் ஏறக்குறைய அரை கிலோ மீட்டருக்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் கடும் வெயிலின் தாக்கத்தால் கடுமையாக அவதிப்பட்டனர்.