சென்னை, மே 8- சென்னையில் தயாரிக்கப்பட்டுள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலுக்கு விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி யுள்ளது.
வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏராளமான மக்கள் வந்தே பாரத் ரயில்க ளில் பயணிக்க தொடர்ந்து விருப்பம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு நகரங்களையும், முக்கிய ஊர்களையும் இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் பெரும்பாலும் பகல் நேர ரயில்களாகவே இயக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் எந்த வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வில்லை.
இரவு நேர நீண்ட தூர பயணத்திற்கான படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் தற்போது தயாராகி வருகின்றன. சென்னை ஐசிஎப் தொழிற் சாலையில் தான் இந்த படுக்கை வசதி யுடன் கூடிய வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சொகுசு வசதிகள் மற்றும் சர்வதேச தரத்தில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட் டுள்ளது.
இந்நிலையில் சென்னை ஐசிஎப் தொழி ற்சாலையில் தயாரான முதல் படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயிலை சோதனை செய்ய ரயில் இந்தியா டெக்னிக்கல் மற்றும் எகனாமிக் சர்வீஸ் சென்டர் நிறுவனத்திற்கு தற்போது ஒப்பந்தம் வழங்கியிருக்கிறது. இந்த நிறு வனமும் இன்டெல் செர்டிபையர் என்ற நிறுவனமும் சேர்ந்து படுக்கை வசதி யுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை பாது காப்பு சோதனை செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வந்தே பாரத் ரயில் பயணத்தின் போது ஆபத்து ஏதும் ஏற்பட்டால் பயணிகள் தப்பிப்பது எப்படி அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் எப்படி எல்லாம் இருக்கின்றன என்பது தொடர்பாக இந்த சோதனையில் ஆய்வு செய்வார்கள் என தெரிகிறது. விரைவில் இந்த சோதனை எல்லாம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.