tamilnadu

img

ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு?: மீண்டும் சூடுபிடிக்கும் வழக்கு

சென்னை, ஜூலை 30- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு நடந்த போது அவரது போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தி, 6 டிரங் பெட்டி நிறைய நகைகள், 1562 ஏக்கர் நிலம் மற்றும் பல கோடி ரூபாய் வங்கிப் பணம் ஆகிய வற்றுக்கான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இவை தற் போது, நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நகை மற்றும் சொத்துக் களை ஏலம் விடுமாறு பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் வழக்கு போட்டார்.

இதையடுத்து வழக்கறிஞர் கிரண்  ஜவாரி என்பவரை நீதிமன்றம் நியமித்து ஏலம் விடுவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதி மன்றம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படை க்கவும், ஏலம் விட்டு வழக்குக்காக கர்நாடக அரசு செலவிட்ட ரூ. 5 கோடியை தமிழக அரசு திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகி யோர் கர்நாடக நீதிமன்றத்தில் ஒரு  வழக்கு தொடர்ந்தனர். அதில் ஜெய லலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் நாங்கள் தான். எனவே நகை உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் தங்க ளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதை யடுத்து அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தான் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, தற்போது கர்நாடக மாநில சட்டத்துறைக்கு ஒரு  கடிதம் எழுதி இருக்கிறார். அதில் இன் னும் மதிப்பு குறையாமல் அப்படியே இருக்கும் நகைகள், சொத்து, பணம் ஆகியவற்றை உடனடியாக ஏலம் விட வேண்டும். இதன் மூலம் தமிழக அரசுக்கு ஏராளமான பணம் கிடைக்கும் அதன் மூலம் ஏழைகளின் நல்வாழ்விற்கு செலவிட முடியும் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் ஜெயலலிதா சொத்து வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.