tamilnadu

img

கூட்டுறவு சங்க நிலுவைத்தொகை எங்கே?

பெருந்திரள் முறையீட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள்  கேள்வி

சென்னை, டிச. 20 - போக்குவரத்து கழக நிர்வாகங்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுததர வலியுறுத்தி வெள்ளியன்று (டிச,20) சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. போக்குவரத்து கழக தொழிலாளர் களுக்கென்று கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழி லாளர்களின் சம்பளத்தில் நிர்வாகம் பிடித்தம் செய்த சுமார் 210 கோடி ரூபாயை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்காமல் உள்ளது. இது சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. குறிப்பாக, விழுப்புரம், சென்னை போக்குவரத்து கழகங்கள், தொழி லாளர்களிடம் பிடித்தம் செய்த 73 கோடி ரூபாயை கடந்த 10 மாதங்களாக சென்னை தேனாம்பேட்டை கூட்டுறவு சங்கத்திற்கு வழங்காமல் உள்ளது. இதன்காரணமாக கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்க இயலாமல் உள்ளனர். சென்னை மத்திய கூட்டுறவு வங்கியும் அரசியல் அழுத்தம் காரணமாக தேனாம்பேட்டை கூட்டுறவு சங்கத்திற்கு கடன் வழங்க மறுத்து வருகிறது.

இந்நிலையில், போக்குவரத்து கழகங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வசூலித்து தர  வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்கு வரத்து கழக சிஐடியு, எல்பிஎப் ஆகிய சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு தலைவர் ஏ.பி.அன்பழ கன், “தேனாம்பேட்டை கூட்டுறவு சங்க நிர்வாகப் பொறுப்பில் இருந்த அதிமுக-வினர் உறுப்பினர்களுக்கு 2 வருடத்திற்கான ஈவுத்தொகை (டிவிடண்ட்) கூட கொடுக்காமல் சென்று விட்டனர். புதிதாக அமைந்த சிஐடியு-எல்பிஎப் நிர்வாகம் உறுப்பினர்களுக்கு ஒரு வருட ஈவுத்தொகையை வழங்கி யுள்ளது. மேலும் ஒரு ஈவுத் தொகையை  வழங்க சுமார் 7 கோடியே 25லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. மாதாமாதம் உறுப்பினர்களுக்கு கடன் வழங்க 5 கோடி ரூபாய் தேவைப் படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணாக நிர்பந்தத்தின் அடிப்படை யில் நிர்வாகங்கள் கூட்டுறவு சங்கத் திற்கென்று பிடித்தம் செய்த பணத்தை வழங்க மறுக்கின்றன.” என்றார். இப்போராட்டத்திற்கு தேனாம்பேட்டை கூட்டுறவு சங்கத் தலை வர் ஆர்.துரை தலைமை தாங்கினார். எல்பிஎப் பொருளாளர் கி.நடராஜன், பழனி, சிஐடியு சம்மேளன நிர்வாகி எம்.சந்திரன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் தயானந்தம், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், கூட்டுறவு ஊழியர் சம்மேளன தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.