சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில்செயல்படும் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திங்களன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு :
கடந்த 30 வருடங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு தன்னிச்சையாக போனசை 10 சதம் என அறிவித்ததை கண்டித்தும் 20 சதம் போனஸ் வழங்க வலியுறுத்தியும் கூட்டமைப்பின் சார்பாக இன்று நடைபெற்றமுற்றுகை போராட்டத்தில் தமிழகம் முழுவதும்சுமார் 30,000 தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது போராட்டத்தையொட்டி முதலில் மாநகர்போக்குவரத்து நிர்வாக இயக்குநர் அழைத்து கோரிக்கைகள் சம்பந்தமாக போக்குவரத்து செயலாளர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து செயலாளர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.போக்குவரத்து ஊழியர்களுக்கு 20 சத போனஸ் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது வழங்கப்படும் போனஸ் 2019 ஏப்ரல் -2020 மார்ச் ஆண்டிற்குரியது. ஊதிய பேச்சுவார்த்தையின் போது போக்குவரத்து ஊழியர்கள் ரூ.16,800 போனஸ் தருவதாக கணக்கிட்டுமொத்த சம்பளத்தை கூட்டினால் மற்ற துறை ஊழியர்களைவிட போக்குவரத்து தொழிலாளர்கள் கூடுதல் பெறுவதாக கணக்கு காண்பிக்கப்பட்டு ஊதியம் 2.44 மட்டும் உயர்வு அளிக்கப்பட்டது. தற்போது போனசும் பறிக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து ஊழியர்களை வஞ்சிக்கும் ஏற்பாடு என விரிவாக பேசினோம்.
இதற்கு பதில் அளித்த போக்குவரத்து செயலாளர் அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. வேறு வழியில்லை. எல்லா துறைக்கும் ஒரேஅடிப்படையில் போனஸ் என அரசு முடிவெடுத்துள்ளது. என்ற அடிப்படையில் பேசினார். அவரது
விளக்கத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.தொடர்ந்து பல்வேறு நியாயங்களை வலியுறுத்தி பேசியதுடன் தற்போது வழங்கப்படும் 10 சதபோனசும் சட்டப்படி கணக்கிட்டு வழங்கப்படுவதில்லை. இது சம்பந்தமாக தொழிலாளர் துறை
யில் வழக்கும் உள்ளது. 20 சதம் எங்களது கோரிக்கை மேற்படி கோரிக்கையை விட்டு கொடுக்க முடியாது. அதே சமயம் தற்போது வழங்கப்படும் போனசை சட்டப்படி கணக்கீட்டு வழங்க வேண்டும். போனஸ் சட்டப்படி போனஸ் கணக்கிட்டிற்கு மாதசம்பளம் ரூ.7,000 அல்லது குறைந்தபட்ச கூலி சட்டப்படியான சம்பளம். இதில் எது அதிகமோ அதை கணக்கிட்டு வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படுவது இல்லை என்ற விவரத்தை கூறியதோடு மத்திய அரசின் சட்டத்திருத்தத்தையும் போனஸ் சட்டத்தின் அந்த பிரிவையும் செயலாளரிடம் காண்பித்தோம். அதை படித்துப் பார்த்த செயலாளர் சரி சட்டப்படி கொடுத்து விடலாம் எனக்கூறி குறைந்தபட்ச ஊதியம் சம்பந்தப்பட்ட விவரத்தை கேட்டார்.
குறைந்தபட்ச சட்டப்படி தற்போது ஓட்டுனருக்கு அடிப்படை சம்பளம் ரூ.9,118 அதற்குரியபஞ்சப்படி ரூ.5,719 இரண்டும் சேர்த்தால் ரூ.14,837 அதன்படி வருடத்திற்கான மொத்த சம்பளம்ரூ.1,78,044. இதற்கு 10 சதம் என்றால் 17,804போனசாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் கணக்கை கூறினோம். இந்த கணக்கை கேட்டவுடன் போக்குவரத்து செயலாளர் அதிகாரிகளை அழைத்து இது சரியா? குறைந்தபட்சசம்பளம் எவ்வளவு? போன்ற விவரங்களை கேட்டார். நமது அதிகாரிகளால் அதற்கு எவ்வித விளக்கமும் அளிக்க இயலவில்லை.20 சத போனஸ் என்றாலே 16,800 ஆனால் 10 சதத்திற்கு 17,804 என கணக்கு வந்த நிலையில் முதலில் சட்டப்படி கொடுக்கலாம் என்று சொன்ன செயலாளர் இதை நான் முடிவு செய்யமுடியாது. நிதி துறை உள்ளிட்ட துறைகளோடு பேசி விட்டு முடிவு செய்யலாம் என கூறினார். கடந்த 3-2- ஆண்டுகளாக இதை நாம் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது தான் இச்சட்டத்தில் உள்ளவற்றிற்கு மாறாக கணக்கிட்டது என்ற நமது கோரிக்கை இப்போராட்டதால் ஏற்கும் நிலை உருவாகி உள்ளது.இப்போது நடைபெற்ற போராட்டத்தில் 20 சதபோனஸ் என்பது மட்டுமின்றி கணக்கீட்டு முறை சம்பந்தப்பட்ட பிரச்சனையிலும் தீர்வு காண வேண்டிய சூழ்நிலை அரசுக்கு உருவாகி உள்ளது.
தொடர்ந்து பேசலாம் என செயலாளர் தெரிவித்தார். அப்படியெனில் இப்போது அறிவித்த போனசை அட்வான்ஸ் என கொடுங்கள். பேசி தீர்வு காணலாம் என தெரிவித்தோம்.அது என்னால் முடியாது, கட்டாயம் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகாண நடவடிக்கை எடுக்கிறேன் என்ற அடிப்படையில் செயலாளர் கூறினார்.போனஸ் பிரச்சனையோடு அகவிலைப்படி நிலுவை, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது, ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டியது போன்ற விசயங்களை வலியுறுத்தினோம். ஓய்வு பெற்றோர் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் ஊதிய பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு பின்பு அனைத்து தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. அரசு தன்னிச்சையாகபோனசை அறிவித்த நிலையில்நமது போராட்டம்தொடர்ந்து போனஸ் பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என செயலாளர் கூறவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கி உள்ளது.போனஸ் பிரச்சனையை தொடர்ந்து வலியுறுத்திநிலுவைத் தொகை பெறுவதற்கான நடவடிக்கையை கூட்டமைப்பு சங்கங்கள் மேற்கொள்வது எனமுடிவு எடுத்துள்ளோம். இப்படிப்பட்ட சூழ்நிலை உருவானதற்கு நமது போராட்டம் முக்கிய காரணம். இத்துடன் இன்றைய போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் எனவும் கூட்டமைப்பு முடிவுசெய்தது. நமது நியாயத்தை மீண்டும் மறுக்கும் நிலையை அரசு எடுத்தால் நாம் மீண்டும் போராடவும், நிலுவையான போனஸ் பெறவும் முயற்சிப்போம். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துதொழிலாளர்களுக்கும் கூட்டமைப்பு நன்றியைதெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து கூட்டமைப்பின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உள்ளிட்ட கோரிக்கைகளின் மீதான போராட்டங்களுக்கு பேராதரவு தர வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.