tamilnadu

img

தேர்தலில் போட்டியிட பணம்தான் முக்கியமா?

சென்னை, மார்ச் 29- ‘தேர்தலில் போட்டியிடும் அள வுக்கு தன்னிடம் பணம் இல்லை’ என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறியது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் போட்டி யிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா  தன்னிடம் சொன்னதாகவும் அது  குறித்து 10 நாட்கள் வரை யோசித்துப் பார்த்த  பின்னர், போட்டியிட விரும்ப வில்லை என்ற முடிவை கட்சியின் தலைமையிடம் தெரிவித்துவிட்ட தாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் தேர்தலில் போட்டியிடும் அள வுக்கான பணம் தம்மிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

தமிழ்நாடு அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம், சாதி போன்றவை வெற்றிக்கான காரணி களில் பிரதானமானதாக பார்க்கப் படும் என்பதால் தேர்தலில் போட்டி யிடவில்லை என்றும் நிர்மலா சீதா ராமன் தெரிவித்திருந்தார். தோல்வி யில் இருந்து தப்பித்துக்கொள்ள சொத்தையான வாதத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தாலும் இந்திய ஜனநாயகத்தின் தற்போதைய மிக மோசமான  நிலைமையை  அவரது பேட்டி தோலுரித்து காட்டுவதாக தலைவர்கள் பலர் கருத்து தெரி வித்துள்ளனர். 

மோடியின் உத்தரவாதம் என்னாயிற்று?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் சமூக ஊட கம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி யில், தேர்தலில் நிற்பதற்கு பணம்  தான் முக்கியம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட சொல்லாத ஒரு ‘அருமையான’ கருத்தை ஒன்றிய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து, தனது சொந்தக் கட்சி யை அம்பலப்படுத்தியமைக்காக அவரை பாராட்டுகிறேன். பணம் இல்லாத காரணத்தால்  மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது நிர்மலாவின் முதல் கருத்து. அப்படியென்றால் பிரத மர் மோடியின் உத்தரவாதம் நாட்டின் நிதியமைச்சரைகூட சென்றடைய வில்லை என்பதுதானே உண்மை  என்று பிருந்தா காரத் வினவியுள் ளார். நாட்டுமக்களுக்கு உத்தர வாதம் அளிக்கக்கூடிய அளவுக்கு எதையும் மோடி அரசு செய்ய வில்லை; ஆனால் பணம் இருந்தால் தான் தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்ற நிலையைத் தான் அரசு உருவாக்கியுள்ளது என்று அவர் சாடியுள்ளார். 

ரூ. 8,500 கோடி எங்கே போனது ?
இரண்டாவதாக, தேர்தலில் செலவு செய்யக்கூடிய அளவுக்கு தன்னிடம்  அவ்வளவு பணம் இல்லை என்றும் நிதி யமைச்சர் கூறியுள்ளார் என்றால், தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக திரட்டிய 8,500 கோடி  ரூபாய் எங்கேபோனது என்றும் பிருந்தா காரத்  கேள்வி எழுப்பியுள் ளார்.  

தொழிலதிபர் களை மிரட்டியும் அச்சுறுத்தியும் சட்ட விரோதமான முறை யில்  பெறப்பட்ட  அந்த பணம் பாஜக வேட்பாளர் களின் தேர்தல் செலவுக்கு போதாதா? என்றும் அவர் கேட்டுள் ளார்.

ஜனநாயகத்தின்  மோசமான நிலை
மூன்றாவதாக, “தேர்தலில் போட்டியிட ஒருநாட்டின் நிதி யமைச்சருக்கே பணம் இல்லை  என்றால் இந்திய ஜனநாயகத்தின நிலை என்ன? தேர்தலுக்கான செல வை அரசே ஏற்கவேண்டும் என்ற எங்களது நீண்ட கால கோரிக்கை ஏன் ஏற்கப்படவில்லை? தேர்தல் சீர்திருத்தத் தின் ஒரு பகுதியாக ஏன் இந்த  கோரிக்கை யை அரசு ஏற்க மறுக்கிறது’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவர் தொடுத்துள்ளார். இந்த கேள்வி களுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நிதியமைச்சரிடமே பணம் இல்லை என்றால் தொழி லாளி, விவசாயிகளின் நிலையை எண்ணிப் பாருங்கள். எது எப்படி யிருந்தாலும் இந்தியா வின் தற்போதைய கவ லைக்குரிய நிலைமை யை  நிர்மலா சீதாராமன் அம்பலப்படுத்தி விட்டார் என்றும் பிருந்தா காரத் தெரி வித்துள்ளார். 

‘விலை உயர்ந்த தேர்தல்’ 
பிருந்தாகாரத் மட்டுமல்ல; நிதி யமைச்சர் நிர்மலா சீதாரா மன் கூறியிருப்பது சாதாரணமான கருத்து அல்ல என்று கூறியுள்ள காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, “உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் நிதி யமைச்சரின் அறிக்கை, இந்திய ஜனநாயகத்தின் மீது இருண்ட நிழல் படர்ந்துள்ளதைக் காட்டுகிறது” என்று கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று நிதியமைச்சர் ஒப்புக் கொண்டது இந்தியத் தேர்தல் எந்தளவுக்கு விலை உயர்ந்த தேர்தலாக மாறியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தேர்தல் என்றால் நடுத்தர மக்கள்  போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டனர் என்றும் இது தான் மோடி அரசின் உத்தரவாதமா என்றும் அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.