“பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எது சொன்னாலும் பொய் தான். 1976 மார்ச் 23-ம் தேதி கச்சத்தீவுக்கு ஒரு ஒப்பந்தம், வெஜ்பேங்குக்கு ஒரு ஒப்பந்தம் என்று இரண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும். அதுதொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” என்று காங்கிரஸ் தலைவர் கு. செல்வப் பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.