தாம்பரம் மாநகராட்சி எல்லை யில் அமைந்துள்ளது குன்றத்தூர் ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சி. இங்குள்ள 6வது வார்டில் அம்பேத்கர் நகர், பாரதமாதா நகர், பெரியார் நகர், பெரியார் நகர் விரிவு, ஜெயலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1100 வீடுகள் உள்ளன. “1990ம் ஆண்டிற்கு பிறகு ஒரு கிரவுண்ட் நிலத்தை 10 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கி குடியேறினோம். பேருந்து வசதி கூட இல்லாத அந்த காலத்தில், கழனி நிலத்தை மேடாக்கி, வாழ தகுதியான இடமாக்கி வசித்து வருகிறோம். இந்த பகுதியை அணைக்கட்டு தாங்கல் என வகைப்படுத்தி ஒரு பகுதி குடியிருப் புகளுக்கு பொதுப்பணித்துறை - நீர்வளத்துறை நோட்டீஸ் கொடுத்து ள்ளது. இந்த பகுதியை சுற்றியே எங்களது வாழ்வாதாரம் உள்ளது. வாழ்வாரத்தை இழந்துவிட்டு என்ன செய்ய முடியும்” என்று அம்பேத்கர் நகரை சேர்ந்த மதுபாலா கேள்வி எழுப்புகிறார்.
பதில் சொல்ல மறுக்கும் அதிகாரிகள்
“உடலுழைப்பு தொழிலாளர் கள் மிகுந்த இந்த பகுதிக்கு அவ்வப்போது வரும் அதிகாரி கள் முறையாக பதில் சொல்வ தில்லை. அதிகாரிகள் வந்தாலே மக்களிடத்தில் பதற்றம் ஏற்படு கிறது. 25 வருடமாக மக்கள் வாழ்ந்து வருகிறோம். இந்த பகுதியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 32 பேருக்கு வீடு கொடுத்துள்ளனர், அடையாற்றில் இருந்து வெகுதொலைவில் உள்ளோம். அடையாறு ஆறுக்கு தேவை யான நிலத்தை அளவீடு செய்து, தடுப்பு சுவரும் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் விவசாயம் நடை பெறவில்லை. கால்நடைகளும் இல்லை. இதற்கு பிறகும் குடியி ருப்புகளை தொந்தரவு செய்வது ஏன்? எனவே, நிலத்தை வகை மாற்றும் செய்து பட்டா வழங்க வேண்டும்” என்கிறார் அதே பகுதியை சேர்ந்த யாயாதீன்.