சென்னை:
மாணவர்களுக்கான பள்ளி பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ள விவரங் களை உடனடியாகவெளியிட வேண்டும்என வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் , செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு: 2020-21 ஆம் கல்வியாண்டில் மொத்த 210 வேலை நாட்களில், அக்டோபர் மாதம் இறுதி வரையில் கிட்டத்தட்ட100 வேலை நாட்கள் முடிய உள்ளன. இந்நிலையில் பல மாதங்களாக பாடபுத்தகத்தில் 40 சதவீத பாடங்கள் மாணவர்களுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச் சரின் அறிவிப்பு அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறது. ஆனால் குறைக்கப் பட்ட பாடங்கள் எவை? எந்தெந்த பாடங்களை மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தவெளிப்படையான தெளிவான அறிவிப்புகள் இன்று வரை வரவில்லை.
தனியார் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக தெரியவருகிறது. அதில் அனைத்து பாடங்களும் மாணவர்களுக்கு நடத்தப்படுவதாகவும் தெரிகிறது. ஆனால், அரசுபள்ளிகளில் மாணவர்களுக்கு அவர் களது குடும்பச் சூழலின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத நிலையில் மாணவர்களுக்கு லேப்டாப் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு அவர் களாகவே ஆசிரியரிடம் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து படித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். நேரடியாக வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆதரவோடு படித்து வந்த அரசு பள்ளிமாணவர்களுக்கு குடும்பச் சூழல் காரணமாக இம்மாதிரியான கற்றல் பெரிய அளவிற்கு உதவி புரியவில்லை என் னும் எதார்த்தத்தை அரசு புரிந்து கொண் டதாக தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர், தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து பொதுத் தேர்வுகளுக்கு அதிகமான வினாக்கள் கேட்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.
பாடங்கள் எது என்பது தெளிவாகாத நிலையில் தேர்விற்கு தயாராக வேண் டும் என்பது போன்ற அறிவிப்பினால் மாணவர்கள் குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். தனியார் பள்ளி மாணவர்கள் ஆன் லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் கல்வி தொலைக்காட்சி குறித்து அவர் கள் கவனம் செலுத்துவதில்லை. அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பலருக்கும் அவர்களது வீட்டில் கல்வி தொலைக்காட்சி தொடர்பு கிடைக்காத சூழல் நிலவி வருகிறது. அரசு கேபிள் இணைப்பு பெற்ற குடும்பத்தில் மட்டுமே கல்வி தொலைக்காட்சி வழங்கப் படுகிறது. வேறு சில தனியார் தொலைக்காட்சி இணைப்புகளை பெற்றிருப்பவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி அல்லது அந்த வகுப்பு ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சிகள் ‘பெய்டு சேனலாக’ இருப்பதனால் அதற்கான தொகையை கட்டுவதில் சிரமம் ஏற்படுகிறது. இம்மாதிரியான களச்சூழல்களை கணக்கில் கொள்ளாமல் மாணவர் களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் விதமான அறிவிப்புகளை அமைச்சர் வெளியிடுவது சரியல்ல. எனவே மாணவர்களின் கல்வி நலன் கருதி குறைக்கப்பட்டுள்ள 40 சதவீதமான பாடங்கள் எவை என உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.