tamilnadu

img

ஆரோக்கியமே உண்மையான சொத்து குடியரசு துணைத் தலைவர் பேச்சு

சென்னை,ஜூலை 14 “ஆரோக்கியமே உண்மையான சொத்து - தங்கம், வெள்ளி போன்றவை சொத்துக்களல்ல” என்ற மகாத்மா காந்தியின் கருத்து, தனிநபர்களுக்கு மட்டுமின்றி, இந்த சமு தாயத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருந்தும் என குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் எம்ஜிஎம் சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையை சென்னையில் ஞாயிறன்று (ஜூலை 14) திறந்துவைத்துப் பேசிய அவர்,நாட்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் அனைத்து அரசுகளும், சுகாதாரம், மக்கள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி வருவதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியர்களின் சராசரி வாழ்நாள் 69-ஆக உயர்ந்திருப்பதாகக் கூறி னார். பல்வேறு தொற்று நோய்கள் அறவே ஒழிக்கப்பட்டு இருப்பதாக வும் அவர் குறிப்பிட்டார்.      நவீன மருத்துவ சிகிச்சை கள் மற்றும் மேம்பட்ட சுகா தார வசதிகள் கிடைக்கச் செய்ததன் மூலம், ஆரோக்கியம் மேம்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   சுகாதாரத் துறையில் நாடு இன்னும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறிய அவர், சுகாதாரத் துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாதது, மருத்துவர்-நோயாளிகள் விகிதாச்சாரக் குறைவு, மக்கள் வருமானத்தை மீறி மருத்துவச் செலவு செய்ய வேண்டிய நிலை, கிராமப் புறப்பகுதிகளில் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லாதது, சுகாதார காப்பீடு திட்டம் அதிக மக்களை சென்றடையாதது மற்றும் தடுப்பு மருத்துவ குறைபாடு போன்றவையே சவால்களாக உள்ளன என்றார்.   நவீன சுகாதார வசதிகள் கிராமப்பகுதிகளுக்கு சென்றடைய அரசு மேற்கொள்ளும் முயற்சி களில், தனியார் பங்களிப்பும் அவசியம் என்றார்.  தகுதியான மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற துணை மருத்துவப் பணி யாளர்களின் பற்றாக்குறை கவலையளிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.  தற்போதைய நிலையில், நாட்டில் ஆறு லட்சம் மருத்துவர்கள் மற்றும் 20 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுவதாகவும் குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.   கடந்த 50 ஆண்டு களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது,  பச்சி ளங்குழந்தைகள் மற்றும் பிரசவ கால இறப்பு விகிதங்கள் வெகுவாக குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஹெச்ஐவி மற்றும் காசநோய் போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். தொற்றா நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க, உரிய நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.