tamilnadu

img

மாதர் சங்க நடைபயணத்திற்கு புதுவையில் மேளதாளத்துடன் வரவேற்பு

புதுச்சேரி, நவ. 28- மாதர் சங்க பிரச்சார நடை பயணத்திற்கு புதுவையில்  மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன் முறைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், போதையற்ற தமிழம், புதுச்சேரியையும் உருவாக்கிடவும், ஆணவக் கொலைகளுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் பிரச்சார நடை பயணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் வட லூரில் துவங்கிய  நடைபய ணம் புதுச்சேரி எல்லையான பாகூர் கொம்யூன் சோரி யாங்குப்பத்தை வந்தடைந் தது. பொதுச்செயலாளர் பி.சுகந்தி தலைமையில், அகில இந்திய துணைத் தலைவர்கள் உ.வாசுகி, சுதாசுந்தரராமன், மத்தியக் குழு உறுப்பினர் அமிர்தம், புதுச்சேரி பிரதேசத் தலைவர் சந்திரா, செயலாளர் சத்தியா, பொருளாளர் இள வரசி உள்ளிட்ட நடைபயணக்  குழுவினரை மேளதாளத்து டன்  இளநீர் கொடுத்து புதுச்  சேரி எல்லையில் வரவேற்ற னர்.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்,  மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன், பிரதேசக்குழு உறுப்பி னர்கள், ராமமூர்த்தி, சரவ ணன், கலியன், கொம்யூன் குழு உறுப்பினர்கள் அரி தாஸ், முத்துலிங்கம், செல்வ ராசு, கவூசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அதேபோல் பாகூர் மேற்கு வீதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்  பிரதேச துணைத்  தலைவர் பத்மநாபன், செய லாளர் சங்கர் தலைமையி லும், கரிகலாம்பாக்கத்தில் நிர்வாகிகள் மாரிமுத்து, மலர்விழி தலைமையிலும், வில்லியனூர் கோட்டைமேட் டில் சிபிஎம் கொம்யூன் செய லாளர் ஐயப்பன் தலைமை யிலும் வரவற்பு அளிக்கப் பட்டது. மாணவர்களின் விழிப்பு ணர்வு ஊர்வலத்தை மட்டுமே   கண்ட புதுச்சேரி மக்கள், வெள்ளை மற்றும் சிவப்பு  நிற ஆடை அணிந்து, வன் முறை மற்றும் போதைக்கு எதிராக முழக்கமிட்டு, நடை பயணம் மேற்கொண்ட பெண்களுக்கு வழிநெடுகி லும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.