tamilnadu

img

பிரச்சார பயணக்குழுவிற்கு விழுப்புரத்தில் இருளர் இன மக்கள் வரவேற்பு

விழுப்புரம், நவ. 29- வன்முறையற்ற, போதையற்ற தமிழகம் உருவாக்கிட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம் மேற்கொண்டுள்ள நடைபய ணம் புதுச்சேரியை கடந்து வியாழ னன்று மாலை விழுப்புரம் மாவட்ட எல்லையான மொரட்டாண்டியை வந்தடைந்தது. பயணக் குழுவிற்கு திருச்சிற்றம்  பலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வானூர் வட்டச் செயலாளர் ஜி.ராஜேந்திரன் தலை மையில் மேளதாளங்களுடன்  வர வேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேருந்து நிறுத்தம் அருகே நடை பெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சித்ரா தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் நீலா முன்னிலை வகித்தார்.  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். பயணக் குழு வின் நோக்கங்களை விளக்கி  அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, மாநில துணைச் செயலா ளர் எஸ்.கீதா ஆகியோர் பேசினர்.  பயணக் குழுவில் பங்கேற்றவர்க ளுக்கு  முன்னாள் தலைவர்களில் ஒருவரான பாப்பா உமாநாத் படமும், புடவையும் வழங்கப்பட்டன. இதில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், பி.குமார், எஸ்.முத்துக்குமரன், சே. அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அன்று  அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கினர். வெள்ளியன்று (நவ. 29) துவங்கிய  பிரச்சார பயணக் குழுவிற்கு புளிச்ச பள்ளம் கிராமத்தில் பழங்குடி இரு ளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பேராசிரியர் பிரபா.கல்வி மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வரவேற்று சிற்றுண்டி வழங்கினர். காட்ராம்பாக்கத்தில் விவசாயக் கூலி வேலை செய்து கொண்டு இருந்த பெண்கள் மது ஒழிப்புக்கு ஆதரவு தருவதாக பயணக் குழுவினரிடம் தெரிவித்தனர். கிளி யனூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, ஆகி யோர் தலைமையில் வரவேற்பு  அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் சார்பிலும் வர வேற்பளிக்கப்பட்டது.