tamilnadu

img

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் – வானிலை மையம்  

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் நவ.9,10 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

சென்னை – தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து  பெய்து வருகிறது. இதனால் வருகிற நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் நவம்பர் 9,10,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழக – ஆந்திர கடலோரப் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வங்கக்கடலில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 9 ஆம் தேதிக்குள் கரை திரும்பவும் அறிவுறுத்தி உள்ளன. 

;