விழுப்புரம், மார்ச் 27- பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அது வெளிப்பட்டுவிடக் கூடாது என்ப தற்காக, இரண்டாம் கட்டத் தலை வர்களை வைத்து பெயரளவில் பாஜகவை விமர்சிப்பதை எதிர்ப் பையும் அவ்வப்போது செய்து வருகிறது.
அந்த வகையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பாஜகவை விமர்சிப்பதற் காக ஒதுக்கிவிடப்பட்டுள்ளார். அவரும் பாஜகவை விமர் சித்து வருகிறார். இந்நிலையில், விழுப்புரத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சி.வி. சண்முகம் பேசியிருப்ப தாவது:
போதும்டா சாமி.. போதும்டா சாமி!
“நமது துரோகிகளை தங்களது கையில் வைத்துக் கொண்டு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடலாம் என பாஜக நினைக்கிறது. அது நடக்க வில்லை. மக்களைப் பற்றி சிந்திக்காத அரசு பாஜக மக்க ளிடையே மதவாதத்தை தூண்டி வருகிறது. மீண்டும் மோடி வேண்டும் மோடி என்கின்றார்கள். நாங்கள் என்ன சொல்கிறோம், என்றால் ‘வேண்டாம் மோடி வேண்டாம் மோடி.. போதும்டா சாமி போதும்டா சாமி.. நீங்கள் ஆண்ட பத்தாண்டு போதும்டா சாமி, இந்த அளவிற்கு மக்கள் கஷ்டப்பட்டு எல்லாம் போதும்டா சாமி என்கிறோம்.
இவ்வாறு சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.