tamilnadu

img

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்க!

மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்க மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணிநேரமும் கூடுதல் அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் புகார் அளிக்கலாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.