செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை, அக். 24- சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி, முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். கடந்த சில நாட்களாக சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் கனமழை பெய்த தால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. புதனன்று நிலவரப்படி ஏரியின் நீர் இருப்பு 20.97 அடியாகவும், கொள்ளளவு 2,848 மில்லியன் கன அடி யாகவும் இருந்தது. மழை குறைந்ததால் வியாழன் காலை நீர் வரத்து 1,980 கன அடியாகக் குறைந்தது. ஏரியில் 21.27 அடி உயரம் தண்ணீர் உள்ள நிலை யில், வினாடிக்கு 750 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரை யோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. வியாழன் காலை 6 மணி நிலவரப்படி முக்கிய ஏரிகளின் நீர்நிலை: பூண்டி சத்தியமூர்த்தி சாகர்: மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியில் தற்போதைய இருப்பு 2,404 மில்லியன் கன அடி. நீர் வரத்து வினாடிக்கு 4,210 கன அடி. செம்பரம்பாக்கம்: மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் தற்போதைய இருப்பு 2,926 மில்லியன் கன அடி. புழல்: மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியில் தற்போதைய இருப்பு 2,757 மில்லியன் கன அடி. நீர் வரத்து வினாடிக்கு 542 கன அடி. உபரிநீர் வெளியேற்றம் வினாடிக்கு 750 கன அடி. சோழவரம்: மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கன அடியில் தற்போதைய இருப்பு 526 மில்லியன் கன அடி. நீர் வரத்து வினாடிக்கு 795 கன அடி. கண்ணன்கோட்டை: மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடியில் தற்போதைய இருப்பு 437 மில்லியன் கன அடி. நீர் வரத்து வினாடிக்கு 100 கன அடியாக உள்ளது.