சென்னை, ஜூன் 11 - சென்னை மாநகராட்சி எல்லைகள் விரிவுபடுத்த ப்பட்டதன் அடிப்படையில் தான் வார்டு மறுவரையரை செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் குளறுபடிகளுக்கு இடமில்லை என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட 200 வார்டு களில் 5 ஆயிரத்து 720 வரைவு வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. இதன் பட்டியல் கடந்த 10 ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில், வார்டு களுக்கான வாக்குச்சாவடி மையங்களின் மறுவரை யறை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க, தி.மு.க, சிபிஎம், சிபிஐ, விசிக, உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று (ஜூன் 11) நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்ட த்தில், அதிமுக சார்பில் பாலகங்கா, ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, திமுக சார்பில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, சிபிஎம் சார்பில் முருகேசன், குமார், சிபிஐ சார்பில் ராமமூர்த்தி, ஏழு மலை ஆகியோர் பங்கேற்ற னர். பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய மா.சுப்பிர மணியன், ‘வார்டுகளை பிரிப்பதில் பாலின குளறு படி, ஜாதி வாரியான குளறு படி போன்ற பல்வேறு குளறு படிகள் உள்ளன. மேலும், இவை அனைத்தும் திட்ட மிட்டு செய்யப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது. மாநகராட்சி ஆணையரிடம் எதன் அடிப்படையில் வார்டு மறுவரையரை செய்யப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை கேட்டதாகவும், அவர் இது தொடர்பான முழு விவரமும் அனைத்து கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும்’ என்று கூறியதாகவும் தெரிவித்தார்.