tamilnadu

img

நியூயார்க் பல்கலை.யுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேலூர், ஜூலை 19- தானியங்கி வாகனம் வடி வமைப்பு குறித்த ஆராய்ச்சிக்கு நியூயார்க் மாநில பிங்ஹாம்டன் பல்க லைக்கழகத்துடன் விஐடி  பல்கலைக்கழகம் புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்துள்  ளது. இதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடும் நிகழ்ச்சி வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், பிங்ஹாம்டன் பல்கலைக்கழ கப் பேராசிரியர் தில்லான்  ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர். இதுகுறித்து செய்தி யாளர்களிடம் விஐடி வேந்தர்  ஜி.விசுவநாதன் கூறியது: விஐடி, நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக் கழகம்) இணைந்து இந்தியா வில் தானியங்கி முறையில்  (ஆளில்லாத) இயங்கும் வாகனங்களை வடிவ மைப்பது தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட உள்ளது.

இதற்கான ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, விஐடி,  பிங்ஹாம்டன் பல்கலைக்கழ கமும் இணைந்து 5 ஆண்டு களில் முதுகலை பட்டமும் வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அதாவது விஐடி பல்கலைக்கழகத்தில் மூன்றரை ஆண்டுகள் இளங்கலை பட்டம் பயிலும் மாணவர்கள், அடுத்த ஒன் றரை ஆண்டுகள் நியூயார்க் நகரிலுள்ள பிங்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் படித்து  5 ஆண்டுகளில் முதுகலைப்  பட்டத்தைப் பெற வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. தற்போது இந்த முது கலைப் பட்டம் பெற 4 ஆண்டுகள் இந்தியாவிலும், 2 ஆண்டுகள் அமெரிக்கா விலும் என 6 ஆண்டுகள் செலவிட வேண்டியுள்ளது. இதன்மூலம், மாணவர்க ளுக்கு ஓராண்டுக்கு முன்பே  முதுகலைப் பட்டம் பெற இயலும்.  இந்தப் படிப்பு இந்த கல்வி ஆண்டு (2019-20) முதலே தொடங்குகிறது. விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள 13 துறைகளில் பயி லும் மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுவர் என்றார். இதில் விஐடி துணைத்  தலைவர் சங்கர் விசுவநாதன், பேராசிரியர் ஸ்ரீஹரி, விஐடி பல்கலைக்கழக இயந்திரவியல் துறைத் தலைவர் வாசுதேவன், சர்வ தேச உறவுகள் துறை துணை இயக்குநர் பிரிஜேஷ்  நாயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.