சென்னை, நவ. 26- விம்கோ நகர் மார்க்கெட் சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் பேரவை கூட்டம் தலைவர் கபூர் தலைமையில் நடைபெற்றது.
சென்னை மாவட்ட சாலையோர சிறு கடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயராமன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ஜெகதீஷ் வேலை அறிக்கை யையும், பொருளாளர் அல்லி ராணி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.அன்பு ஆகியோர் வாழ்த்திப் பேசினார். சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.வெங்கட் பேரவையை நிறைவு செய்து பேசினார்.
தீர்மானங்கள்
விம்கோ நகர் மார்க்கெட் பகுதியை விற்பனை செய்யும் மண்டலமாக அறிவிக்க வேண்டும், விடுபட்டுள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு
தலைவராக கபூர், செயலாளராக ஜெகதீஷ், பொருளாளராக அல்லி ராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.