தமிழகத்தில் நடைபெறும் ஆணவப் படுகொலைகளை கண்டித்து விழுப்புரம் மாவடத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் சு.ஆற்றலரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன், மாவட்டச் செயலாளர்கள் ஏ.சேரன், இரா.பாமரன், செய்தி தொடர்பாளர் தமிழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.