விழுப்புரம், ஜூலை 3- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக அன்னியூர் ஏ. சிவா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அன்னியூர் சிவாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காணை ஒன்றியம் கெடார் கிராமத்தில் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு உரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சிறந்த பண்பாளர் புகழேந்தி!
விக்கிரவாண்டி தொகுதியில் உங்களால் சட்டமன்ற உறுப்பின ராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் புகழேந்தி. இரவு-பகல் பாராமல் உங்களுக்காக துடிப்பாக பணி யாற்றிய சிறந்த பண்பாளர் அவர்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட போதும் தொகுதி மக்களின் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்திக் கொண்டு வந்தார். ஆனால் அவரது மரணம் அனை வரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்த தொகுதி மக்கள் இடைத் தேர்தலைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாமகவுக்கு பாடம் புகட்டிய மக்கள்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம் மக்களவைத் தொகுதி யில் போட்டியிட்ட இந்தியா கூட்ட ணியில் பானைச் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கள் வேட்பாளர் துரை. ரவிக் குமார், மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்ட முரளி சங்கரை காட்டி லும் சுமார் 2 லட்சம் வாக்குகள் கூடு தலாக பெற்றார். மேலும், விழுப்புரம் மக்களவைத் தொகுதி யில் பாட்டாளி மக்கள் கட்சி டெபாசிட் இழக்கும் அளவிற்கு மக்கள் பாடம் புகட்டியதால் இது வரைக்கும் மாம்பழம் சின்னத்தால் எழுந்திருக்கவே முடியவில்லை. 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு, சமூக நீதி பற்றி அடிக்கடி பேசி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால் பாஜக தலைவர் நட்டாவும், பிரதமர் மோடியும் இட ஒதுக்கீடு என்ற கொள்கையை ஏற்றுக் கொள் வார்களா? பாஜக தான் இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்கிறதா? நிச்சய மாக ‘இல்லை’ என்பது ராமதாசுக்கே தெரியும்.
1990-களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக் கீட்டை கொடுத்த சரித்திர நாயகன் வி.பி. சிங். ஆனால் அவரது ஆட்சியை அன்றைக்கு கலைத்தது மட்டுமல்ல, கவிழ்த்தவர்களும் இதே பாஜக, ஆர்எஸ்எஸ் கூட்டம் தான். இன்றைய பிரதமர் மோடி, அண்ணாமலையின் கூட்டம் தான்.
அவ்வாறு வி.பி. சிங்கை வீழ்த்திய பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு இட ஒதுக்கீடு பற்றிப் பேசு வதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வெட்கப்பட வேண்டாமா?
இட ஒதுக்கீட்டுக்கு நேர் எதிரான பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்து உள்ளதை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என்பதை அந்தக் கட்சியில் இருக்கும் தொண்டர் களும் நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் மீறி, பாஜகவுடன் பாமக கூட்டுச் சேர்ந்து இருப்பது இடஒதுக்கீட்டை பெறுவதற்காகவா என்றால், இல்லவே இல்லை; பதவி சுகத்துக்காக, ஒன்றிய ஆட்சியைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கவும், எப்படியாவது அன்புமணியை ஒன்றிய அமைச்சரவையில் சேர்த்து விட வேண்டும் என்பதற்காகவுமே ராமதாஸ் கூட்டணி அமைத்திருக்கிறார். அது இல்லை என்றால், வேறு எதற்காக என்று கூற முடியுமா?
பாமகவின் கடைசி அத்தியாயம்!
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது. எடப்பாடியும் அண்ணாமலை யும் ஒன்றாக விருந்து சாப்பிட்டார்கள். ஆனால், பாஜகவை சுமந்து கொண்டே இருந்தால் இருக்கும் ஆதர வும் பறிபோய்விடும் என்பதை உணர்ந்து, அவர்கள் பாஜகவைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டனர்.
குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அந்த பாஜகவை, பாமக தனது முதுகில் சுமந்து கொண்டு வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஏற்கெனவே மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டி னார்கள். ஆனால் மீண்டும் பாஜக வோடு பாமக சேர்ந்து வருகிறது. இதன் மூலம் பாமக தனது வரலாற்றுப் புத்தகத்தில் கடைசி அத்தியாயத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல், பாமகவின் கடைசி அத்தியாயத்தை எழுதும் மகத்தான பொறுப்பை வாக்கா ளர்களுக்கு வழங்கியிருக்கிறது.
நிறம் மாறும் ராமதாஸ்!
பாமக நிறுவனர் ராமதாசைப் பொருத்த வரை கொள்கை கோட் பாட்டில் நிலையாக - உறுதியாக நிற்பது இல்லை என்பது வரலாறு. காலை யில் ஒன்று, மாலையில் ஒன்று, இரவு ஒன்று என்று நேரத்திற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொண்டே இருப்பார்.
மோடி அரசுக்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள் என கேட்ட போது பூஜ்ஜியம் மார்க் தான் கொடுப் பேன் என கூறிய அதே மருத்துவர் ராம தாஸ், தற்போது அதே மோடி தான் சிறந்த பிரதமர் என பிதற்றுகிறார் என்றால், என்ன காரணம்?
ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் என்று வந்துவிட்டால் அந்த தேர்த லில் மரணம் அடைந்த கட்சியைச் சேர்ந்த ஒருவரையே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்பு கூறினார். அந்த கொள்கைப்படி ராமதாஸ், திமுக வேட்பாளர் சிவாவை அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டி போடுகிறது அவரது கட்சி.
தற்போது ஏன் தேர்தலில் போட்டியிட்டார்?
அண்ணாமலை கூறியதால் வேறு வழி இல்லாமல் போட்டியிட்டாரா? என்று தெரியவில்லை. கொள்கையை விட்டுக் கொடுத்து அண்ணாமலைக்கு பாமக அடிபணிந்து விட்டதா? சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பாஜக, வர்ணாசிரம தர்மத்தை தூக்கிப் பிடிக்கிறது. மேல் சாதி, கீழ் சாதி என்று சூத்திரர்களை அடிமைப் படுத்தி வருகிறது. அந்தக் கட்சியை பாமக எப்படி தூக்கிச் சுமக்கிறது? அப்படியிருக்க, இட ஒதுக்கீட்டை முற்றி லும் எதிர்த்து மநு தர்மத்தை ஆதரித்த கொலைகாரனுக்கு சிலை வைத்ததை பாராட்டி அன்புமணி பேசுகிறார்.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசும் இங்குள்ள அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசை வலியுறுத்தி வரு கின்றன. ஆனால், அப்படி சாதி வாரி யாக கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறி வரும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் பாமகவுக்கு விக்கிரவாண்டி தொகுதி மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
ஆண் - பெண் சமத்துவம்!
சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை நிலைப்பாடாகும். குறிப்பாக, ஆண் - பெண் என்ற ஏற்றத் தாழ்வுகளே இருக்கக் கூடாது. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்கிற நிலை மாற வேண்டும். ஆண்களுக்கு நிகராக அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். அத்தகைய சமத்துவம் வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
சாதியற்ற சமூகம் வேண்டும்!
சமூகத்தில் மேல் சாதி, கீழ் சாதி என்கிற பாகுபாடு ஒழிய வேண்டும். ஒருவரை கீழ் சாதி என்று தள்ளி வைப்பதும் ஓரங்கட்டுவதும் ஒழிக்கப் பட வேண்டும். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடுகள் எதுவும் இல்லா மல் ‘அனைவரும் சமம்’ என்கின்ற சமத்துவ சமூகம் மலர வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் மார்க்சிஸ்ட்டுகள்.
ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும்!
அதேபோல், நாட்டில் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் இன்னமும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு பக்கம் வசதி யானவர்கள் கோடி கோடியாய்ப் பணத்தையும் சொத்தையும் ஏகபோக மாக குவித்து வைத்திருக்கிறார்கள். மறுபக்கத்தில் குடியிருப்பதற்குக் கூட இடமில்லாமல் வறுமையில் வாடும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வரு கிறது. இப்படிப்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மீட்டெடுத்து சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை யான கொள்கையாகும்.
மன்மோகன் ஆட்சிக் காலத்தில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளின் வலுவான நிர்ப்பந்தம் காரணமாக 100 நாள் வேலைத்திட்டம் கொண்டுவரப் பட்டது. இதனால் ஏழைக் கூலித் தொழிலாளர்கள், பெண்கள் வாழ்வா தாரம் பாதுகாக்கப்படும். ஆனால், மோடி ஆட்சியில் 100 நாள் வேலை 20 நாள், 30 நாளாக குறைக்கப் பட்டுள்ளது. இது ஏழைப் பெண்களுக்கு செய்யும் இழப்பு இல்லையா, இதில் நமது தொகுதிப் பெண்கள் பாதிக்கப்படவில்லையா? அத்தகைய பாஜகவுக்கு உடந்தையாக பாமக இருக்கலாமா?
எங்கள் வெற்றிப் பயணம் தொடரும்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று இந்தியா கூட்டணி பிரச்சாரத்தை முன்னெடுத் தது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்றியது. தமிழ்நாட்டு வாக்காளர்கள் அதிமுக, பாஜக - பாமக கூட்டணியை முற்றிலும் நிராகரித் தார்கள். அவர்களது தோல்விப் பயணம் தொடரும். அதே நேரத்தில் இந்தியா கூட்டணியின் மகத்தான வெற்றிப் பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.